காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர் உ.
உதயசிறிதரின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இணைந்து டெங்கு ஒழிப்பு கள விஜயம் கடந்த 07 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
13 மற்றும் 14 ஆந் திகதிகளில் 165ஏ,166 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் டெங்கு கள விஜயம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் டெங்கு பரவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட 03 வீட்டு உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 30 வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு கள விஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள், ஆகியோர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
வீடுகளுக்கான கள விஜயத்தினை தொடர்ந்து டெங்கு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




















