மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்தும் தொழிற் சந்தை மற்றும் தொழிற்கல்வி கண்காட்சியானது இன்று (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களும், தனியார் தொழில் வழங்கும் நிறுவனங்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் கலந்து கொண்டு தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில்
வழிகாட்டல்களையும் , ஆலோசனைகளையும் வழங்கியிருந்ததுடன் நூற்றுக்கு மேற்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு பயனடைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, மாவட்ட இணைப்பாளர் ( மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம்) W.மைக்கல் கோலின், மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கருணாகரன், மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள வேலை வாய்ப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எஸ்.செல்வமலர், அஸ்மி தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





















