காத்தான்குடியில் சமூக அடிப்படையிலான மாற்றுவழி பிணக்குத் தீர்வு பொறிமுறையின் கீழ் சமுதாய சனசமூக மத்தியஸ்த சபைகள் நிறுவுவதற்கான புதிய அவை உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 21.07.2023 வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் M.ஹிஸ்புள்ளாஹ் அவர்களின் ஒருங்கிணைப்பில்
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தி நடைபெற்றது பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மடக்களப்பு மாவட்ட நீதிபதி எச்.எம்.முஹம்மது பஸீல் அவர்கள் கலந்து கொண்டதுடன்
மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் MIM.ஆஸாத் அவர்களின் பங்களிப்புடன் கடிதங்களை வழங்கி வைத்தார்.
புதிய மத்தியஸ்த சபையில் 14 பெண்களும் 20 ஆண்களுமாக 34 உறுப்பினர்கள் நியமனம் பெற்றனர் இச்சபையின் தவிசாளராக MMM.மஃசூம்
அவர்களும், உப தவிசாளரக முபீதா றமீஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு நியமனம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, நகரசபை செயலாளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
























