கலைஞர் சுவதம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும் அறிவுறுத்தல்களுக்கமைவாகவும் காத்தான்குடி கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் கலைஞர்களுக்கு உலருணவுப் பொதி வழங்கும் நிகழ்வு ( 30) திங்கட்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
அந்தவகையில் உதுமா லெப்பை முஹமட் ஹனீபா (பாவா வயது 70), அகமது லெப்பை அப்துல் காதர் (வயது 85) ஆகிய இரு கலைஞர்களுக்கு 2500/= பெறுமதியான ( சிவப்பு சோற்றரிசி, அரிசி மாவு, சமபோஷ, கடலை, கௌப்பி, நெத்தலி)
உலருணவுப் பொதி உதவிப் பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் நளீம், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.


















