காத்தான்குடி மகளிர் மகா சங்க கூட்டம் மற்றும் ஊதியமற்ற பராமரிப்பு பணிப்பகுப்பாய்வு தொடர்பான பயிற்சிப் பட்டறையானது 2023.11.09 ஆந் திகதி வியாழக்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில் மகளிர் மகா சங்க உறுப்பினர்கள் 45 பேர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி நெறியில் திருமதி.யூ.ஆர்
வீ.றஸ்மின்(WDO) மற்றும் திருமதி.பீ.கௌரீசன் (CA) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் ஊதியமற்ற பராமரிப்பு வேலைகள் பற்றிய பகுப்பாய்வு, பால்நிலை வகிபங்கு தொடர்பான பயிற்சிகளும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் செயற்பாடுகள் பற்றிய தெளிவவூட்டல்களும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திருமதி.எச்.வீ.எம்.சில்மி தாஜுதீன் (WDFA), திருமதி.யூ.சுவேந்திரன்(CRPO), மற்றும் எஸ்.கோவிந்தராசா, பீ.சந்திரகாந்தன் ( Drugs prevention), திருமதி.கிருத்திகா பகலவன் ( DO) ஆகியோர் கலந்து கொண்டனர்.






















