No Drugs நாங்கள் Youth "போதைப் பொருள் அற்ற இளைஞர் தலைமுறை " எனும் தொனிப்பொருளில் போதைப் பொருள் தடுப்பிற்காக இளைஞர் தலைவர்களுக்கான முதலாம் நாள் விழிப்புணர்வு செயலமர்வானது 2023.11.12 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கிழமை
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் இளைஞர் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக போதை முற்தடுப்பு உத்தியோகத்தர்களான P.சந்திர காந்தன், S.கோவிந்தராசா, WDO திருமதி. URB. றஸ்மின், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவின் பயிற்றுவிப்பாளர் செல்வி.S.சுஜிவா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் தலைவர்களுக்கு
வளவாளர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.


















