Legal Aid Commission சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக சிறுவர் பெண்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகம் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கான நிவாரணங்கள் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2023.12.14 ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் சிறுவர் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.ஆர்.வீ.றஸ்மீன் அவர்களது ஒருங்கிணைப்பில் IWARE அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இச்செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, மற்றும் நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப் , நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ,
சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளவாளர்களாக சட்டத்தரணி FX.விஜயகுமார், LLB,MPhil கே.கிறிஸ்ணகுமார், நுகர்வோர் அதிகாரசபையின் Investigation Officer அகமட் நபார், மற்றும் ரீ.சுதர்சன், சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளான திருமதி.மிருதினி சுரேஸ்குமார், திருமதி.கஜாலினி ஹரிபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















