பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய 2019ம் ஆண்டிற்கான முதலாம் திகதி அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த 02-01-2019ம் திகதி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அரச உறுதி மொழி பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தரினாலும் ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொது மக்கள் பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோத்தர்களாகிய நாம் அரச கடமைகளை வினைத்திறனாகவும் பயனுறுதிமிக்கதாகவும் பொதுமக்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளரினால் அறிவுருத்தப்பட்டது. மேலும் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தினராலும் அறிவுரைகள் வழங்கப்பட்டு அந்நிகழ்வு இனிதே முடிவுற்றது.
















