காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 3வது பிரதேச தினக் கூட்டமானது 2023.05.22 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இப் பிரதேசத்தில் இனங் காணப்பட முக்கிய பிரச்சனைகளான டெங்கு பரவல், மீனவர்கள் பிரச்சனைகள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும், சிறுவர் இல்ல மாணவர்களுக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் பல்,கண் சம்பந்தமான மருத்துவ முகாம்களை நடாத்துமாறு பிரதேச செயலாளரால் சுகாதார வைத்திய அதிகாரியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் அதனை நடத்துவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது.
அத்துடன் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு வாய் (ஆண்), மற்றும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வூட்டுவது தொடர்பாகவும், போதைப் பொருள் ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர், செயலாளர் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச,அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் அவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















