கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.05.29 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 27ஆந் திகதி நடைபெற்ற நடமாடும் சேவையில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு சேவைகளை பெற்றுக் கொண்டமைக்காக அதனை திறம்பட ஒழுங்கமைத்த உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளரால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தின் அனைத்து வேலைகளும் 2023.05.31 ஆந் திகதி நிறைவு பெறும் என உதவிப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேலும் உணவுப் பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தினை மிக விரைவாக GNO,EDO,SDO,Dos அனைவரும் இணைந்து அதனை பூர்த்தி செய்யுமாறு பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மே 30 தொடக்கம் ஜூன் 05 வரை தேசிய ரீதியில் சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வுகளை GNO,EDO,SDO,Dos மற்றும் கள உத்தியோகத்தர்ள் அனைவரும் பங்குபற்றுமாறும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதியோர் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்,SO,
YSO, WDO, ECDO, சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆகிய உத்தியோகத்தர்களிடம் தங்களின் வேலைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















