காத்தான்குடி பிரதேசத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் செயலணியினருக்கான கலந்துரையாடலானது 2023.06.02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.த.நிர்மலராஜ், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், காதி நீதிபதி Ms.ரூபி, சட்டத்தரணி உவைஸ், மற்றும் DEO திரு.கலாவுதீன், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி திரு.சந்திரகாந்தன், IWARE நிறுவனத்தின் பணிப்பாளர் அனிஸா பிர்தௌஸ், WIN நிறுவனத்தின் பணிப்பாளர் Ms.சங்கீதா , கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கான வழிப்படுத்தல் தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றது. அதன் போது நீதிமன்றில் முன்னைய காதியின் தீர்ப்பில் திருப்தியின்மை, பாரபட்சமுள்ள பெண்கள் மீளவும் வழக்கினை பதிவு செய்யுமாறு ஆலோசிக்கப்பட்டு அனைத்து பெண்களுக்கும் இத்தகவலை அடையச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வானது மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.R.B.றஸ்மின் அவர்களது இணைப்பாக்கத்தில் IWARE பெண்கள் அமைப்பின் முழுப் பங்களிப்புடனும் நடைபெற்றது.



|
ReplyForward
|















