கலை இரசனை வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் நாடகப் பயிற்சிப் பட்டறையானது 2023.06.06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் மெத்தைப்ள்ளி வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இப் பயிற்சிப் பட்டறையில் மட்/மம/ மெத்தைப்ள்ளி வித்தியாலயம், மட்/மம/அல்ஹீரா வித்தியாலயம், மட்/ மம /மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை) ஆகிய பாடசாலைகளில் இருந்து 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் வளவாளராக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், களுவாஞ்சிக்குடி, ப.ராஜதிலகன் கலந்து கொண்டு மாணவர்களின் கலை ஈடுபாடுகளை விருத்தி செய்தல், மாணவர்களுக்கு அரங்க விளையாட்டு மற்றும் நாடகம் சார் பயிற்சிகளையும் மிகவும் சிறந்த முறையில் தெளிவுபடுத்தியிருந்தனர்.




















