காத்தான்குடி பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் சுவட்டு மைதான நிகழ்வுகளும், சான்றிதழ் வழங்கும் விழாவும் 07/10/2023 ஆந் திகதி சனிக்கிழமை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்ஷாத் அலி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ILM .சாபிர் அவர்களின் தலைமையில் காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.ஜேசுதாசன் கலாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அதிதிகளாக சமூக மேம்பாட்டுக்கான மக்கள் நிறுவன பணிப்பாளர் MIM. ஹாரிஸ் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமா MSM.நூர்தீன் அவர்களும், விளையாட்டு உத்தியோகத்தர் இன்சாத் மொகமட் அலி அவர்களும் மற்றும் முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் NMM.பாயிஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 34 ஆவது இளைஞர் விளையாட்டுப் போட்டியின் குழு மற்றும் தனி விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
























