0.10.2023 ஆந் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தல் செயற்பாட்டிற்கான களவிஜயம் ஒன்று ( 12) ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இக் களவிஜயத்தின் போது ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மரம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு அதன் கிளைகளை அகற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.அத்துடன் நீர் வழிந்தோடக் கூடிய தோணாக்களை பார்வையிட்டதுடன் நீர் செல்லத் தடையாக இருக்கின்ற தோணாக்களை நகரசபைக்கு துப்பரவு செய்யுமாறு பணிக்கப்பட்டது.
மேலும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தோணாக்களில் விடப்படுவது அவதானிக்கப்பட்டு குறித்த கடை உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் பொலிஸ் மற்றும் சுகாதார பிரிவினருக்கு உரிய சட்ட நடவடிக்கை பணிமேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த பிரதிப் பணிப்பாளர் ஆகியோரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தோணாக்களில் அதிகளவான குப்பைகள் கொட்டப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசிக்கப்பட்டது.
இக்களவிஜயத்தில் திருமதி.ஆர்.எவ்.அமீன் (LO), திருமதி.எம்.பாஸ்கரன் (DO, Coast Conservation Dept), திருமதி.ஆர்.பாஸ்கரன் (DEO, CEA, District office), KDW.அனுரா(SI, police station,kky) மற்றும் AMM.பஸீர்(SPHI,MOH, kky), MIM.நியாஸ் (AO,UC, kky), MSM.சிம்றி (DMA,DMC,kachcheri), MN.நஜ்மி(DO,NDRSC,Dsoffice, kky) ஆகியோர் கலந்து கொண்டனர்.
























