கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தொளஸ் மகே பாண வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் SAM.நலீம் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோரது ஒருங்கிணைப்பில் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி ஊடாக உள்ளூர் கதை மரபு மற்றும் உள்ளூர் உணவு தயாரிப்புக்களை அறிந்து கொள்ளல் பயிற்சி பட்டறை
இடம் பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில்
மட்/மம/பதுரிய்யா வித்தியாலயத்தில் 19,20,21 ஆகிய திகதிகளில் 30 மாணவர்களும், மட்/மம/ மீராபாலிகா தேசியப்பாடசாலையில் 25,26 ஆகிய திகதிகளில் 30 மாணவர்களும் , மட்/மம/அல்அமீன் மகா வித்தியாலயத்தில் 05,10, ஆகிய திகதிகளில் 30 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டுகள் மூலமாக தலைமைத்துவம் பற்றிய தெழிவுபடுத்தல்களுடன் அவர்களுடாக முன்னோர்களின் உள்ளூர் கதைகள் மற்றும் உள்ளூர் உணவு முறைகள் அதன் தயாரிப்புக்கள் பற்றிய தகவல்களைப் பெற்று ஆவணப்படுத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியினை மேற்கொள்வதற்கு பாடசாலை அதிபர்களது முழுமையான ஒத்துழைப்பும் மாணவர்களின் ஆர்வமுடனான பங்களிப்பும் இப் பயிற்சி சிறப்பாக நடைபெறுவதற்கு வழிவகுத்தது எனலாம்.இது போன்ற பயிற்சிகள் மேலும் நடாத்தப்பட வேண்டுமெனவும் இப்பயிற்சியானது புது விதமாக உள்ளதாகவும் மாணவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இப்பயிற்சியினை ம.நிறோசினி தேவி , நண்பி , சமதை
பெண்ணிலைவாத நண்பிகள் குழு ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.




|
Reply
Forward |















