சமுர்த்தி தேசிய சம்மேளனம் " பிரஜா ஹரசர" விருது வழங்கும் விழாவானது 2023.10.30 ஆந் திகதி புதன்கிழமை மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம் பெற்றது.
இவ் விழாவில் சமுர்த்தி உத்தம பூஜா சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் பிரதேச அமைப்புக்கான பாராட்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 167C கிராம உத்தியோகத்தர் பிரிவு தலிபான் சமுதாய அடிப்படை அமைப்பு முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
இவ் விருதினைப் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (30) பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இவ்விருதினை பெற்றுக் கொள்வதற்கு வழிப்படுத்திய பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர், மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், தலிபான் சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் இவ் விருதினைப் பெறுவதற்கான முக்கிய காரணம் அவர்கள் நிறுவன ரீதியான செயற்பாடுகள் மட்டுமன்றி சமூகம் மற்றும் சூழல் சார்ந்த செயற்பாடுகளை செய்ததுடன் அது தொடர்பான ஆவணங்களையும் சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டமையுமேயாகும். எனவே எந்த செயற்பாட்டையும் செய்யும் போது ஆவணங்களை சரியான முறையில் பேணப்படுதல் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
























