காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கா ஏழாவது பிரதேச தினக் கூட்டமானது ( 07) ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் கடந்த பிரதேச தினக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட 6ம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்ன லெப்பை மாவத்தையிலுள்ள நகை உருக்கும் பட்டறையினால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக பிரதேச சுற்றாடல் அதிகாரியிடம் (மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை) நகை உருக்கும் பட்டறை அமைப்பதற்காக ஏன் அனுமதி வழங்கப்பட்டது சம்பந்தமாக பிரதேச செயலாளரால் வினவப்பட்டது.
மேலும் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச செயலாளரால் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பாக (2024-2028) அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய திட்டங்கள், திணைக்களத்தினால் வழங்கப்பட்ட Proposal தொடர்பான Summery விளக்க காட்சிகள் (Presentation) மூலம் DCO வினால் விளக்கிக் காட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜாநிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர் செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
























