காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது 2023.11.09 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்ரி அவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரால் கணக்குக்கிளை, காணிக்கிளை, திட்டமிடல் கிளை, மற்றும் பதிவாளர் கிளை , சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு ஆகிய பிரிவுகள் தொடர்பான அறிக்கைகள் விளக்க காட்சிகள்(Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஆலோசனைகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் கிளைத்தலைவர்கள், பதவி நிலை உதவியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கணக்காளர் செல்வி.கே.சித்ரா அவர்களின் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.


















