தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வி அமைச்சு இணைந்து செயற்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்களுள் ஒன்றான " சுரக்கும் பவ" எனும் திட்டத்தின் கீழ் பாடசாலையில் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கி அதன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட மட்/மம/காத்தான்குடி மத்திய கல்லூரி,மட்/மம/ நூறாணியா வித்தியாலயம், மட்/மம/மெத்தைப் பள்ளி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை அமைத்து செயற்படுத்துவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் காகிதாதிகள் மற்றும் உபகரணங்கள் 2023.11.14 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்விற்கு திருமதி.நிஸா றியாஸ் (DCPO), திருமதி.பீ.கௌரீசன் (CA) ஆகியோர் கலந்து கொண்டனர்.


















