காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள பாடநெறியின் 2ம் கட்ட ஆரம்ப நிகழ்வு 2023.12.14 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பாடநெறியில் 71 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளராக என்.துஜோகாந் அவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆரம்ப நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















