மேற்படி விவசாய அமைச்சி4னூடாக இச் செயற்திட்டத்தினை வெற்றி பெறச் செய்வதற்காக பிரதேச மட்டத்தில் விழிப்புட்டல்களுடன் கூடிய வேலைத்திட்ங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் சேதனைப்பசளை தயாரித்தல் செயற்றிட்டமானது 2021.07.20 ஆந் திகதி புதிய காத்தான்குடி தெற்கு(167C) கிராம உதத்தியோகத்தர் பிரிவில் ஆமினாப்பள்ளிவாயல் மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட சேதனைப்பசளை உற்பத்தியாளர்களுக்கு சேதனைப்பசளையினை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றிய செயல்முறைப் பயிற்சி வளவாளராக கமநல கேந்திர நிலையம்,காத்தான்குடி விவசாயப் போதனாசிரியர் திருமதி.றமீஸ் முபிதா அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் இப்பயனாளிகளுக்கான மேலதிக பயிற்சியும் விகர்தல்களும் எதிர்வரும் 2021.07.27 ஆந் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.


















