தேசிய விளையாட்டு தினமான ஜுலை 31 ஆந் திகதியினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2021.07.30 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைக்கமைவாகவும், நிருவாக உத்தயோகத்தர் திருமதி.எஸ்.Nஐ.எம்.ஐலால்டீன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் விளையாட்டு உத்தியோகத்தர் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடனும் தேசிய விளையாட்டு தினம் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது முதலில் பிரதேச செயலாளரின் தேசிய கொடியேற்றப்பட்தோடு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் உரை இடம் பெற்றது. அதன் போது அனைத்து உத்தியோகத்தர்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி இன்றியமையதாவையாகும். ஒவ்வொருவருடைய ஆரோக்கியமற்ற தன்மை எம்மையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதிக்கின்றது. எனவே உத்தியோகத்தர்களாகிய நாம் நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இதே போன்று அலுவலகங்களில் எமது சுகயீனம் எமது கடமையையும் ,அலுவலக கடமையினையும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும். அது மட்டுமன்றி போசாக்கான உணவுகளை உட்கொள்வதுடன் உடல் உள ஆரோக்கியத்தை பேணிக்கொள்ள வேண்டும். கடைகளில் விற்கப்படும் உணவுகளை உட்கொண்டு அதன் சுவைக்கு அடிமையாகி எமது ஆரோக்கியத்தை இழந்து விடக்கூடாது. எனும் பல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விளையாட்டு உத்தியோகத்தரால் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் 15 நிமிட உடல் அப்பியாசப்பயிற்சிகளை சிறப்பாக வழங்கினார்.





















