"அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்" எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரின் முன்னெடுப்புடன் சிறுவர் தினக்கொண்டாட்டமானது 2021.10.01 ஆந் திகதி வெள்ளிக்கழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் காத்தான்குடி 167A கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது சென்ற வருடம் போன்று சித்திரப்போட்டி, சிறுவர் குறுநாடகப்போட்டி, சிறுவர் குறுந்திரைப்படப்போட்டி, போன்ற போட்டி நிகழ்ச்சிகள் இன்றி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் 'சூழல் நேயமிக்கவர்களாக சிறுவர்களை உருவாக்கி பட்டினி அற்ற மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை உருவாக்குதல்' எனும் நோக்கேர்டு சிறுவர் சுற்றாடல் பாதுகாப்பு படையணியை தாபித்தல் மற்றும் ஒரு லட்சம் பலாமரக்கன்றுகளை நாட்டும் தேசிய நிகழ்வு நடைபெற்றது.
அதனடிப்படையில் சிறுவர்கள் பலாமரக்கன்றுகளை தங்கள் வீடுகளிலும் ,பொது இடங்களிலும் தங்கள் கரங்களால் நட்டு அதனை தொடர்ச்சியாக பராமரித்து வருவதுடன் இதற்கான மரம் வளரும் குறிப்புக்களுக்கான அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அந்தவகையில் மரங்களின் வளர்ச்சியின்யின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு உலக சான்றிதழ்கள் சிறுவர் தினத்தின் போது வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.எம்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் கழக உறுப்பினர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறார்களும் கலந்து கொண்டனர்.அத்துடன் Covid-19 தொற்று காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




















