கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் காத்தான்குடி பிரதேச செயலக சமூக பராமரிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் சுயதொழில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.12 ஆந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.கு.யு.வு.நஜீமுதின் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வானது 09 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்,மற்றும் Wheel Chair உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கணவனால் கைவிடப்பட்ட , கணவனை இழந்த ,கணவன் சிறையில் உள்ள, பெண்கள் தலைமைதாங்கும் 06 குடும்பங்களுக்கு தையல் தொழில் ,சிறுகடை வியாபாரம் செய்வதற்கு சுயதொழில் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக தையல் தொழிலுக்கு ரூபா 25,000 உம் சிறுகடை வியாபாரத்திற்கு ரூபா 20,000 உதவிப்பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



















