மியன்மார் அரசாங்கத்தினால் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு வழங்கப்பட்ட அரிசி கையளிக்கும் நிகழ்வு 18.04.2023 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் சமூகப் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு சுற்றாடல் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் , முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளருமான திரு.MM.நாஸர், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.MMM. ஜரூப், 167A கிராம உத்தியோகத்தர் திருமதி.SNM.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் அரிசிப் பொதியானது மிகவும் பாதிப்பிற்குள்ளான 375 குடும்பங்களுக்கு 20Kg பொதி வழங்கி வைக்கப்படவுள்ளது.இதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 120 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.






















