சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு 2023.05.30- 2023.06.05 ஆந் திகதி வரையிலான முழு வாரமும் சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந் தவகையில் இன்று 2023.05.30 செவ்வாய்க்கிழமை மரநடுகை தினமாகும்.அதனை முன்னிட்டு 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது.
அதன் ஆரம்ப நிகழ்வு 166A,164,167C,167A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா ஆகியோர் கலந்து கொண்டு மரநடுகையினை ஆரம்பித்து வைத்தனர்.
மா, கொய்யா, அம்பெர்லா, மற்றும் தேசி,தோடை, ஆகிய மரக்கன்றுகள் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடப்பட்டுள்ளது.
இவ் நிகழ்விற்கு GSO,EDO,SDO,DCO,DO( Environment) , மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் இமாம் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
























