" *நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்"*
எனும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவும் , ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுவானது 2025.03.08 ஆந் திகதி சனிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் காத்தான்குடி ரைய்யான் பீச் ஹாடன் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இஸ்லாத்தில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விழிப்பூட்டல் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எஸ்.நுஸ்ரி நழீமி மற்றும் பெண்கள் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் எனும் தலைப்பில் சட்டத்தரணி ஏ. உவைஸ் ஆகியோர் சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தினால் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மேலும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கணக்காளர் திருமதி.கே.சித்திரா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.றஊப் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி Dr.நஸீர்தீன், ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி திருமதி.அனிசா பிர்தௌஸ் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதி நிகழ்வாக இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.







|
ReplyForward
|















