துரித சேவையினை வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான கடவுச் சீட்டுக்களை சிரமமின்றி அவர்களுடைய மாவட்டங்களில் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடவுச் சீட்டினை வழங்கும் ஆரம்ப நிகழ்வு 2023.06.22 ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வோர் தெரிவு செய்யப்பட்ட புகைப்பட நிலையங்களுக்கு சென்று புகைப்படம் மற்றும் பதிவினை மேற்கொண்டு 03 நாட்களில் துரித சேவையாயின் ரூபா 15000 உம் 14 நாட்களில் பெற்றுக் கொள்ளும் சாதாரண சேவையாயின் ரூபா 5000 பணத்தினை இலங்கை வங்கி கிளையில் செலுத்திய பின் தங்களது கையடக்க தொலைபேசிக்கு பிரதேச செயலகத்திற்கு செல்லும் நாள், மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட குறுந்தகவல் கிடைத்ததும் பிரதேச செயலக ஆட்பதிவு திணைக்கள பிரிவிற்கு சென்று கைவிரல் அடையாளம் மற்றும் கையொப்பத்தினையும் உறுதி செய்து கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை நிறைவு செய்து கொள்ள முடியும்.
 
மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு முறைமைகள் (Computer) மூலம் இணையத்தில் கடவுச் சீட்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவர்கள், புகைப்பட நிலையத்தில் புகைப்படங்களை பெறாதவர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று புகைப்படம், மற்றும் கைவிரல் அடையாளம் ஆகியவற்றை வழங்கி கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை மேற் கொள்ள முடியும்.
 
இந் நிகழ்விற்கு ஆட்பதிவு திணைக்களத்திற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எவ்.பீ.எம்.அஹமட், திருமதி.கே.விஜயகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கீ.குகன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு புகைப்பட நிலைய சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளர், தொழில்நுட்ப ஆலோசகர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top