Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளும் ஆரம்ப நிகழ்வு
துரித சேவையினை வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான கடவுச் சீட்டுக்களை சிரமமின்றி அவர்களுடைய மாவட்டங்களில் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடவுச் சீட்டினை வழங்கும் ஆரம்ப நிகழ்வு 2023.06.22 ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வோர் தெரிவு செய்யப்பட்ட புகைப்பட நிலையங்களுக்கு சென்று புகைப்படம் மற்றும் பதிவினை மேற்கொண்டு 03 நாட்களில் துரித சேவையாயின் ரூபா 15000 உம் 14 நாட்களில் பெற்றுக் கொள்ளும் சாதாரண சேவையாயின் ரூபா 5000 பணத்தினை இலங்கை வங்கி கிளையில் செலுத்திய பின் தங்களது கையடக்க தொலைபேசிக்கு பிரதேச செயலகத்திற்கு செல்லும் நாள், மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட குறுந்தகவல் கிடைத்ததும் பிரதேச செயலக ஆட்பதிவு திணைக்கள பிரிவிற்கு சென்று கைவிரல் அடையாளம் மற்றும் கையொப்பத்தினையும் உறுதி செய்து கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை நிறைவு செய்து கொள்ள முடியும்.
மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு முறைமைகள் (Computer) மூலம் இணையத்தில் கடவுச் சீட்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவர்கள், புகைப்பட நிலையத்தில் புகைப்படங்களை பெறாதவர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று புகைப்படம், மற்றும் கைவிரல் அடையாளம் ஆகியவற்றை வழங்கி கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை மேற் கொள்ள முடியும்.
இந் நிகழ்விற்கு ஆட்பதிவு திணைக்களத்திற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எவ்.பீ.எம்.அஹமட், திருமதி.கே.விஜயகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கீ.குகன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு புகைப்பட நிலைய சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளர், தொழில்நுட்ப ஆலோசகர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















































