Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
நாடகப் பயிற்சிப் பட்டறை
கலை இரசனை வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் நாடகப் பயிற்சிப் பட்டறையானது 2023.06.06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் மெத்தைப்ள்ளி வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இப் பயிற்சிப் பட்டறையில் மட்/மம/ மெத்தைப்ள்ளி வித்தியாலயம், மட்/மம/அல்ஹீரா வித்தியாலயம், மட்/ மம /மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை) ஆகிய பாடசாலைகளில் இருந்து 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் வளவாளராக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், களுவாஞ்சிக்குடி, ப.ராஜதிலகன் கலந்து கொண்டு மாணவர்களின் கலை ஈடுபாடுகளை விருத்தி செய்தல், மாணவர்களுக்கு அரங்க விளையாட்டு மற்றும் நாடகம் சார் பயிற்சிகளையும் மிகவும் சிறந்த முறையில் தெளிவுபடுத்தியிருந்தனர்.





பாரம்பரிய விளையாட்டு விழா-2023
காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஒழுங்குபடுத்தலில் பாரம்பரிய விளையாட்டு விழாவானது 2023.06.08 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி சிறுவர் இல்லத்தில் இடம் பெற்றது.
இவ்விளையாட்டு விழாவில், 68 சிறுவர் இல்ல சிறார்கள் பங்குபற்றியதுடன் மாணவர்களின் கலை ஆர்வம் மற்றும் மனரீதியான ஆற்றுப் படுத்தல் செயற்பாட்டினையும் மையப்படுத்தியதாக முட்டி உடைத்தல், தேசிக்காய் ஓட்டம், யானைக்கு கண் வைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், பணிஸ் சாப்பிடுதல், குளம் கரை, சுரைக்காய் இழுத்தல், போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றது.
இவ்விளையாட்டு நிகழ்விற்கு சிறுவர் இல்ல பொறுப்பாளர் திரு.எவ்.எம்.மஜித், கிராம உத்தியோகத்தர் திருமதி.மபாஸா சுல்பிகார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எம்.நிஸ்றின், NDDCB உத்தியோகத்தர்களான திரு.எஸ்.சந்திரகாந்தன், திரு.பீ.கோவிந்தராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.




டெங்கு ஒழிப்பு கள விஜயம் -2023
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகம், நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், இணைந்து 2023.06.06 ஆந் திகதி தொடக்கம் வீடு வீடாகச் சென்று டெங்கு களப்பரிசோதனைகள் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
டெங்கு கள விஜயத்தினை தொடர்ந்து அது தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதேச செயலாளர் அவர்களது தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இக்கூட்டத்தில் உத்தியோகத்தர்கள் கள விஜயத்தினை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை, டெங்கு சோதனையில் எவ்வாறான இடங்களை பார்வையிட வேண்டும் என்பது தொடர்பாக பிரதேச செயலாளரினால் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.





டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டம்
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டமானது 2023.06.06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய காலநிலை மாற்றத்தினால் டெங்கு நோயின் தீவிரத்தன்மை குறைவடைந்த போதிலும் முற்றாக டெங்கு நுளம்பின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்ற நிலை வரும் வரை MOH,UC, பொலிஸ், பிரதேச செயலகம், இணைந்து அதனை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அத்துடன் டெங்கு பரவும் ஆபத்தான இடங்கள், வீடுகள், நீர் தேங்கி நிற்கும் இடங்கள், என்பவற்றை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேலும் மிக முக்கியமாக பாடசாலைகளில் டெங்கு சிரமதானம் செய்தல், மாணவர்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை நடாத்துதல், பாடசாலைகளில் டெங்கிற்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமித்தல், அத்துடன் விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து டெங்கினை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை திறம்பட செய்ய பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல விரிவுரைகள் செய்ய வேண்டிய தேவை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதற்கு பிரதேச செயலகம், நகரசபை, பொலிஸ் முழு ஒத்துழைப்பையும் தருவதாகவும் திட்டங்களை பாடசாலை ஆரம்பமான பின்னர் நடைமுறைப் படுத்தபடவுள்ளதாகவும் திட்டமிடப்பட்டது.
அத்துடன் 2023.06.06 ஆந் திகதியிலிருந்து (Home & Home visit) வீடுகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு கள நடவடிக்கைகளை மேற்கொள்வது என திட்டமிடப்பட்டு Action plan செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி நகரசபை செயலாளர், AMO, மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர்,DEO, பொது சுகாதார பரிசோதனைகள், பள்ளி வாயலில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் செயலாளர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

























