காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டமானது 2023.08.08 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் 167A,167B,167C , ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வாடி அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்விற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர், E-Planer, நில அளவையாளர், மற்றும் மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்,கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் (167A,167B,167C) , காணிப்பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், காணிக்கிளை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களுக்கு உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வருடமும் கலைஞர்களுக்கு (ரூ.10000) உதவிக் கொடுப்பனவு வழங்குதல் நிகழ்வானது 2023.08.07 ஆந் திகதி திங்கட்கிழமை செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கொடுப்பனவுகள் எஸ்.எல்.நஜிமுதீன், எம்.ஐ.எம்.முஸ்தபா, ஏ.எம்.அப்துல் அஸீஸ், ஆகிய ய மூன்று கலைஞர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன், யோ.தனுசியா, காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.



சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு வேலைத் திட்டம் -2023 வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 164 C கிராம உத்தியோகத்தர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று வீடுகளில் முதலாவது வீடான எஸ்.எம்.மாஜிதா என்பவரது வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2023.07.26 ஆந் திகதி புதன்கிழமை சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.எஸ்.அன்சார் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன், வலய முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்பி, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வீ.விஜயலக்ஸ்மன்
(சந்தைப்படுத்தல்) திருமதி.பு.ரதீஸ்காந்தி (CBO) , கருத்திட்ட உதவியாளர் ஏ.எல்.எச்.எம்.இப்றாஹிம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் முகைதீன், தைக்கா பள்ளி வாயல் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வீட்டிற்காக அரசாங்கத்தினால் ரூ.750,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (04) வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்ரி அவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரால் கணக்கறிக்கைகள், உள்ளக கணக்காய்வு பிரிவு அறிக்கைகள், சமுர்த்தி விசேட கொடுப்பனவுகள், மற்றும் காணி என்பன விளக்க காட்சிகள்(Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஆலோசனைகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
பிரதம உள்ளக கணக்காய்வாளர் கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி பிரதேச செயலகமானது நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மிகவும் சிறந்த முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதற்காக பிரதேச செயலாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இக் கூட்டத்திற்கு பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், பதவி நிலை உதவியாளர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கணக்காளர் செல்வி.கே.சித்ரா அவர்களின் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.





ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 167A மற்றும் 167B ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கு 2023.07.25 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களால் தலா மூன்று ஆடுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு கால்நடை வைத்திய அதிகாரி SDM.மாஹிர், பிரிவிற்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான MMM.இர்ஷாத், மற்றும் கலீல்தீன், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களான எம்.ஏ.எம்.நலீம், திருமதி.ராதிகா கோமதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















