Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு -2022
சமூக சேவைகள் அமைச்சினால் காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கான கல்விக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.26 ஆந் திகதி புதன் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன் அவர்கள் தலைமையில் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வானது பாடசாலை செல்கின்ற மாற்றுத்திறனாளிகளான 2 பிள்ளைகளுக்கு கல்விக்கொடுப்பனவாக ஒருவருக்கு ரூபா 10000 வீதம் ரூபா 20000 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் உதவிப்பிரதேச செயலாளரால் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ராதிகா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


சிறுவர் தினக் கொண்டாட்டம்-2021
"அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்" எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரின் முன்னெடுப்புடன் சிறுவர் தினக்கொண்டாட்டமானது 2021.10.01 ஆந் திகதி வெள்ளிக்கழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் காத்தான்குடி 167A கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது சென்ற வருடம் போன்று சித்திரப்போட்டி, சிறுவர் குறுநாடகப்போட்டி, சிறுவர் குறுந்திரைப்படப்போட்டி, போன்ற போட்டி நிகழ்ச்சிகள் இன்றி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் 'சூழல் நேயமிக்கவர்களாக சிறுவர்களை உருவாக்கி பட்டினி அற்ற மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை உருவாக்குதல்' எனும் நோக்கேர்டு சிறுவர் சுற்றாடல் பாதுகாப்பு படையணியை தாபித்தல் மற்றும் ஒரு லட்சம் பலாமரக்கன்றுகளை நாட்டும் தேசிய நிகழ்வு நடைபெற்றது.
அதனடிப்படையில் சிறுவர்கள் பலாமரக்கன்றுகளை தங்கள் வீடுகளிலும் ,பொது இடங்களிலும் தங்கள் கரங்களால் நட்டு அதனை தொடர்ச்சியாக பராமரித்து வருவதுடன் இதற்கான மரம் வளரும் குறிப்புக்களுக்கான அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அந்தவகையில் மரங்களின் வளர்ச்சியின்யின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு உலக சான்றிதழ்கள் சிறுவர் தினத்தின் போது வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.எம்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் கழக உறுப்பினர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறார்களும் கலந்து கொண்டனர்.அத்துடன் Covid-19 தொற்று காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





உலக சிறுவர் தினக் கொண்டாட்டம்-2021.
2021 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர்களுக்கான சித்திரப்போட்டி, குறுநாடகப்போட்டி, (மட்டுப்படுத்தப்பட்ட/திறந்த) மற்றும் குறுந்திரைப்படப் போட்டி (மட்டுப்படுத்தப்பட்ட/திறந்த) போன்ற போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் சிறார்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கேற்ப விண்ணப்பப்படிவங்களை 2021.08.09 ஆந் திகதிக்கு முன்னர்
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் (CRPO)
சிறுவர் பிரிவு
பிரதேச செயலகம்
காத்தான்குடி.
தொலைபேசி இல -0776079627
தேசிய விளையாட்டு தினம் - 2021
தேசிய விளையாட்டு தினமான ஜுலை 31 ஆந் திகதியினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2021.07.30 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைக்கமைவாகவும், நிருவாக உத்தயோகத்தர் திருமதி.எஸ்.Nஐ.எம்.ஐலால்டீன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் விளையாட்டு உத்தியோகத்தர் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடனும் தேசிய விளையாட்டு தினம் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது முதலில் பிரதேச செயலாளரின் தேசிய கொடியேற்றப்பட்தோடு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் உரை இடம் பெற்றது. அதன் போது அனைத்து உத்தியோகத்தர்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி இன்றியமையதாவையாகும். ஒவ்வொருவருடைய ஆரோக்கியமற்ற தன்மை எம்மையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதிக்கின்றது. எனவே உத்தியோகத்தர்களாகிய நாம் நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இதே போன்று அலுவலகங்களில் எமது சுகயீனம் எமது கடமையையும் ,அலுவலக கடமையினையும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும். அது மட்டுமன்றி போசாக்கான உணவுகளை உட்கொள்வதுடன் உடல் உள ஆரோக்கியத்தை பேணிக்கொள்ள வேண்டும். கடைகளில் விற்கப்படும் உணவுகளை உட்கொண்டு அதன் சுவைக்கு அடிமையாகி எமது ஆரோக்கியத்தை இழந்து விடக்கூடாது. எனும் பல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விளையாட்டு உத்தியோகத்தரால் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் 15 நிமிட உடல் அப்பியாசப்பயிற்சிகளை சிறப்பாக வழங்கினார்.





























