மட்டக்களப்பு மாவட்டத்தில் “பிரஜா சக்தி” வேலைத்திட்டம் தொடர்பான விசேட விழிப்புணர்வு கூட்டம்மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பிரஜா சக்தி தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கூட்டம் நேற்று (11) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” வேலைத்திட்டம் தொடர்பாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கலந்து கொண்டு விசேட உரையாற்றினார். மேலும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டு திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் மக்களுக்கான சேவைகள் குறித்து விளக்கமளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.மக்களின் சமூக மற்றும் பொருளாதார வலுவூட்டலை முன்னிறுத்தும் “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தை கிராம மட்டத்தில் திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

                       WhatsApp I2WhatsApp I3WhatsApp I4

காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களை பொதுமக்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகள் மற்றும் விடயஙகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் நேர  விரையம், வீண் அலைச்சல் என்பவற்றை தவிர்த்து பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான நோக்கமாக கொண்டு இணையவழி நேர முன்பதிவு அமைப்பு அங்குரார்பன நிகழ்வு இன்று (11) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களை பொதுமக்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகள் மற்றும் விடயஙகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் நேர  விரையம், வீண் அலைச்சல் என்பவற்றை தவிர்த்து பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான நோக்கமாக கொண்டு இணையவழி நேர முன்பதிவு அமைப்பு அங்குரார்பன நிகழ்வு இன்று (11) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம். எஸ் .சில்மியா, நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

 முகவரி : https://kattankudyds.org

பிரதேச செயலகம் காத்தான்குடி.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் கொடுப்பனவு காசோலை வழங்கும்  நிகழ்வானது 12.03. 2025 புதன்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிகாரா மௌஜுத்  அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
 இந்நிகழ்வில் 2024/ 2026 வருடத்தில் உயர்தரத்தில் கல்வி கற்று 2026 ஆம் வருடம் உயர்தர பரீட்சை எழுதும் 108 மாணவர்களுக்கு கடந்த 2024 ஜூலை தொடக்கம் டிசம்பர் வரையான ஆறு மாதங்களுக்கு தலா 9000/= ரூபாய் காசோலையானது பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
 
 இப்புலமைப்பரிசானது  காத்தான்குடி மத்திய கல்லூரி, காத்தான்குடி மீரா பாலீகா மகா வித்தியாலயம்,   மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் அல்ஹிரா மகா வித்தியாலயம்,  அல் அமீன் மகா வித்தியாலயம்,  புலவர் மணி சரீப்தீன்  மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த  மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து உதவி பிரதேச பிரதேச செயலாளர் திருமதிஎம்.எஸ். சில்மியா அவர்களினால் சிப்தொற புலமைப்  பரிசு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
 
 இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .எஸ்.தனுஜா,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி .பீ.ஜெயராஜ், மற்றும் சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  பாடசாலை
 
மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
S111.jpgS222S666S444S555S777
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் ஒன்று கூடல் நிகழ்வானது  2025.03.19 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் Rayyan beach place, Kattankudy இல்  இடம்பெற்றது.
 
 இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டீனா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அதனைத் தொடர்ந்து இப்தார் நோன்பு நோற்றலின் நோக்கம்,  அதன் கடமைகள்,  மனிதநேய பண்புகள் தொடர்பான கருத்துக்களை அல் அக்ஸா கல்லூரியின்  பிரதி அதிபர் எம்.சீ.எம்.நுஸ்ரி நலீமி, மற்றும்  காத்தான்குடி கிளையின் ஜம்மியத்துலமா தலைவர் அப்துல் கபூர் மதனி ஆகியோர் சிறந்த கருத்துக்களை வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.
 
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி .எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்ரா,  பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .எஸ்.தனுஜா,நிருவாக உத்தியோத்தர் எம்.எஸ்.றஊப்,  நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப்,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ்,   சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி வாங்கி முகாமையாளர்கள்,   மற்றும் பிரதேசசெயலக  உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
 
 
         
 
.19.03519.01019.039.jpg19.01319.031.jpg19.03219.011
" *நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்"*
எனும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவும் , ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுவானது 2025.03.08 ஆந் திகதி சனிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் காத்தான்குடி ரைய்யான் பீச் ஹாடன்  தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
 இந் நிகழ்வில் இஸ்லாத்தில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விழிப்பூட்டல் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எஸ்.நுஸ்ரி நழீமி மற்றும் பெண்கள் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் எனும் தலைப்பில் சட்டத்தரணி ஏ. உவைஸ் ஆகியோர் சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வில் ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தினால்  பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
 
மேலும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கு அதிதிகளினால்  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் கணக்காளர் திருமதி.கே.சித்திரா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.றஊப் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப்,  காத்தான்குடி சுகாதார  வைத்திய அதிகாரி Dr.நஸீர்தீன்,  ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி திருமதி.அனிசா பிர்தௌஸ் ,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இறுதி நிகழ்வாக இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
 
 
WD1111WD4444WD 7777WD8888WD 10 10WD3333WD 9999
 
 
ReplyForward
 

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top