காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியானது கடந்த 2023.02.07 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு அதன் இறுதி நாள் நிகழ்வானது 2023.05.21ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ .உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பாட நெறியில் 37 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இப்பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடநெறியின் வளவாளராக கலந்து கொண்ட திரு.எஸ்.ஜெயராஜ் ஆசிரியருக்கு பிரதேச செயலாளரால் நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.05.22 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் நடமாடும் சேவையானது எதிர்வரும் 2023.05.27 ஆந் திகதி மட்/ஆசிரியர் கலாசாலையில் நடைபெறவுள்ளதால் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைத்து ஆவணங்களுடனும் முழுமையான முறையில் மக்கள் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடுகளையும்,
ஒழுங்குகளையும் மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
நலன்புரி வேலைத்திட்டத்தின் 2ம் கட்ட தெரிவு இறுதிக் கட்டத்தை 80% நிறைவு செய்துள்ளதாகவும் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 25% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்களை மிகவும் தெளிவான முறையில் பெற்றுக் கொண்டு தகுதியானவர்களுக்கு நலன்புரி நன்மைகளை பெற்றுக் கொடுக்குமாறும் இவ் வேலைத்திட்டத்தினை 2023.05.26 ஆந் திகதிக்குள் நிறைவு செய்யப்படள்ளதாகவும்
பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தில் 11329 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முழுமையாக முடிவடைந்துளளதாகவும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முடிவு பெறவில்லை எனவும் அதனை விரைவாக செய்து முடிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காணி உத்தியோகத்தர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்,
சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் ஆகியோரிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





காத்தான்குடி பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு செயலணிக் கூட்டமானது 2023.05.15 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான வெவ்வேறு தலைப்புகளில் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி (TOT) வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் நகரசபையினூடாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட செயற்றிட்டம் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்ற விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போது சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் இக் கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.
பிரதேச செயலகத்திற்காக வழங்கப்பட்ட திட்டத்தின் செயற்பாடுகள் கிரமமான முறையில் நடைபெற்று வருகின்றது என்ற விடயத்தை பிரதேச செயலாளர் குறிப்பிட்டதுடன் சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இச் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும்,
பிரதேச செயலக கலாசார பேரவையினூடாக மாணவர்களுக்கான செயற்பாட்டுத் திட்டங்கள் கிரமமான முறையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இக் கூட்டத்திற்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர், மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்,HRDO,நகரசபை உத்தியோகத்தர்,Iware பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள்,
WDO, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





சமூக பாதுகாப்புச் சபையின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத் திட்டத்தில் பிரதேச மற்றும் தேசிய அடிப்படையில் இலக்கினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது 2023.05.15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணப்பதிகாரி திரு.ஏ.எம்.அமீன் அவர்கள் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் சமூக பாதுகாப்புச் சபையின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத் திட்டத்தில் பிரதேச மற்றும் தேசிய அடிப்படையில் இலக்கினை நிறைவு செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.SMM.றபீக், திருமதி.YIZ.யஸ்மின் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.AL.அப்துல் அஸீஸ் ஆகியோருக்கு மெச்சுரைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.





நிலைபேறான வீட்டுத் தோட்டத்தினை உருவாக்குதல் வேலைத்திட்டத்தின்
கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களின் எண்ணக்கருவில் உருவான 2023 ஆம் ஆண்டில் புதிதாக 300 வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது 2023.05.15 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர்,கௌரவ அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, ஏனைய அதிதிகளாக சமுர்த்தி முகாமையாளர்களான திரு.எம்.ஏ.எம்.சுல்மி, திருமதி.எஸ்.எச்.எம்.முஸம்மில், முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வேலைத்திட்டமானது காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் செயற்படும் 99 சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிதிப் பங்களிப்புடன் தெரிவான 300 வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு முதற் கட்டமாக 108 பேருக்கு கத்தரி, வெண்டி,பாகல்,கெக்கரி,கீரை,பீர் க்கு, ஆகிய பயிர் விதைகள் உள்ளடக்கிய விதைப்பக்கற்றுக்கள் விநியோகிக்கப்பட்டன.ஒரு பாக்கட்டின் பெறுமதி ரூ 320 ஆகும்.
அதனைத் தொடர்ந்து வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான தெளிவூட்டல்களை வளவாளர் விவசாய போதனாசிரியர் திருமதி.முபிதா றமீஸ் அவர்கள் வழங்கி இருந்தார்.
இதன் இரண்டாம் கட்ட நிகழ்வானது 2023.05.17 ஆந் திகதி புதன்கிழமை 192 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
ReplyForward
|
























