Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நோய்கள் தொடர்பான வைத்தியப் பரிசோதனை
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நோய்கள் தொடர்பான வைத்தியப் பரிசோதனை
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Fasting blood sugar, Random Blood sugar, Screening, மற்றும் BMI உடற் திணிவுச் சுட்டி ஆகிய பரிசோதனைகள் (05.12.2023) ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பரிசோதனையில் 128 இற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், SPHI, மற்றும் PHI மார்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்துகொண்டனர். 







பிரதேச கலை இலக்கிய விழாவும் -2023, சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச கலை இலக்கிய விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 2023.11.29 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.சித்திக், கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் 108 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பிரதேச கலை இலக்கிய போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வினை கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம் தொகுத்து வழங்கியதோடு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.கோவிந்தராசா,
வீ.சந்திரகாந்தன் மற்றும் திருமதி.வ.அருணகிரிநாதன் ஆகியோர் நிகழ்விற்கான ஒருங்கிணைப்பு க்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




லஞ்ச ஊழல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
லஞ்ச ஊழல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 2023.11.28 செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்செயலமர்வின் வளவாளராக பிரதேச செயலாளர் கலந்து கொண்டதுடன் நூற்றுக்கு மேற்பட்ட கள உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் ஊழல், லஞ்சம் என்றால் என்ன, ஊழல் தொடர்பான சில பொருட்கோடல், ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள், மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம், சர்வதேச மட்டத்தில் இனங்காணப்பட்ட ஊழலின் விளைவுகள்,ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கான தெளிவூட்டல்கள் பிரதேச செயலாளரால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா,கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.





























